தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
விளக்கம்;-
தனக்குவமை இல்லாதான் என்றால் இறைவனை ஒரு விஷயத்திலும் உவமை சொல்ல முடியாது. அதாவது எதனோடும் இறைவனை ஒப்பிட முடியாது.
தாள் – இறைவனின் திருவடி.
சேர்தல் – இடைவிடாது நினைத்தல்.
அரிது – இல்லை என்பதை உறுதியாகக் கூறுவது. அதாவது, இறைவனின் திருவடிகளைத் தொழாதவரின் மனக்கவலை ஒருபோதும் நீங்காது.
இறைவனை வழிபடாதவன் காமம், கோபம், மயக்கம் போன்ற பிறவித்துன்பங்களால் மீண்டும் மீண்டும் வருந்தி துன்பத்தை அனுபவிப்பான். இறைவனை வழிபட்டால் முக்தி அடையலாம். வழிபடாவிட்டால் மனக்கவலையை மாற்ற முடியாது.
இக்குறள் இறைவனை வழிபடாவிட்டால் வரும் குற்றம் பற்றிக்கூறுகிறது. அதிலும் மனவழிபாடு பற்றிய குற்றம் பற்றியும் கூறுகிறது.