அதிகாரம் – 11 – குறள் – 110

இலக்கியம்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:-

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் – பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை – ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.

நன்றி மறந்தவருக்கு எந்த வகையிலும் உய்வில்லை. இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு உய்வே இல்லை.

பெரிய அறங்களைச் சிதைத்தல் என்றால் என்ன?

  1. பசுவின் முலையை அறுத்தல்.
  2. பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தல்.
  3. அறிஞர்களைக் கொல்லுதல்.

இத்தகையப் பாவங்களைச் செய்தவர்களுக்குக் கூட பிராயச்சித்தம் உண்டு. அதைப்பற்றி நமது அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் நன்றியை மறந்தவருக்குப் பிராயச்சித்தம் இல்லை. அதைப்பற்றி எந்த நூல்களும் பேசவில்லை.

இக்குறள் செய்த நன்றியை மறந்தால் நடக்கும் கொடுமைப் பற்றிக் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *