துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
விளக்கம்;-
இக்குறளிலே மழை எப்படி அமிழ்தமாக இருக்கிறது எனக் கூறுகிறார்.
துப்பு – உணவு.
உண்ணுகிறவர்களுக்கு உண்ணத்தக்க உணவாகவும் ஆகி உண்ணுகிறவர்களுக்குத் தானே உணவாவதும் மழை. இது மழைக்கு மட்டுமே இருக்கிற சிறப்பு. உணவு இல்லாவிட்டால் உயிர்கள் வாழாது. மழை தண்ணீராகவும் உண்ணப்படுகிறது.
துப்பார்க்கு – உண்கிறவர்களுக்கு என்று பொருள். இது சிறப்புடைய உயர்திணைக்கு மட்டுமல்ல. அஃறிணைக்கும் பொருந்தும். அதாவது, மனிதன், விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகளையும் குறிக்கும். இவ்வாறு உயிர்களின் பசிக்கும் நீர் வேட்கைக்கும் உணவாக மழை மட்டுமே காரணம்.
It was a good article, keep writing.