தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
விளக்கம்;-
தானம் – இல்லறம்
தவம் – துறவறம்
வானம் வழங்காதெனின் – மழை பெய்யாதாயின்
மழை பெய்யாவிட்டால் இல்லறமும் துறவறமும் நிலைக்காது என்கிறார். அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. பொருள் இல்லாவிட்டால் இன்பம் இல்லை. மழை இல்லாவிட்டால் உலகம் இல்லை.
தானம் என்பதின் விளக்கம்;-
1 அறவழியில் வந்த பொருளை
2. தக்கார்க்கு
3. உவகையோடு
4. கொடுக்க வேண்டும்.
இந்த நான்கும் சேர்ந்ததுதான் தானம்.
தவம் என்பதின் விளக்கம்;-
மனதை ஐம்பொறிகளின் வழியாகச் செலுத்தாமல் அடக்குதல் அதன் பொருட்டு உண்டி (உணவு) சுருக்குதல் முதலான காரியங்களைச் செய்தல்.
தங்கா – பன்மை
தங்காது – ஒருமை
இல்லறம் இல்லாவிட்டால் துறவறம் இல்லை. எனவே இல்லறம் (தானம்) என்பது (பெரும்பான்மை) பன்மையாகிறது. எனவே தானம் என்று முதலாவது சொன்னார். திருவள்ளுவர் ஒரு சொல்லைக்கூட எங்கே வைக்கவேண்டுமோ அங்கே வைத்திருக்கிறார்.
Nice post, worth reading. Thankful