அதிகாரம் – 2 – குறள் – 20

இலக்கியம்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.

விளக்கம்;-

மேலே கூறிய ஒன்பது குறளிலும் நீர் இன்றி இந்த உலகம் அமையாது என்று சொன்னார். பத்தாவது குறளிலும் அதையே கூறுகிறார்.

யார்யார்க்கும் – உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லோருக்கும் மழை அவசியம் எனவே அடுக்கிக் கூறுகிறார்.

உலகம் (உலகியல்) – பொருள், இன்பம் இதையே குறிக்கும்.

உலகம் இயங்குவதற்கு பொருள் இன்பங்கள் தேவை. இதற்கு அடிப்படையான நீர் தேவை. எனவே நீரின்றி இந்த பொருள் இன்பங்கள் அமையாது.

வானின் றமையாது ஒழுக்கு – வானமாகிய அந்த இடம் இல்லாவிட்டால் மழை இல்லை. அதுபோலவே மழை இல்லாவிட்டால் இந்த உலகமும் இயங்காது.

இப்படி இந்த அதிகாரத்தின் கடைசி மூன்று குறள்களிலும் அறம், பொருள், இன்பங்கள் நடப்பதற்கு மழையே அவசியம் என்று கூறப்பட்டது.

1 thought on “அதிகாரம் – 2 – குறள் – 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *