எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்?

மரபு மருத்துவம்

கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் வீட்டிலேயே அரைத்த கடலை மாவு சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தயிர் அல்லது தேங்காய் உடைத்த தண்ணீர் இதில் ஏதாவது ஒன்றுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக தண்ணீர் சேர்க்கவேண்டாம்.

 முகத்தை சுத்தம் செய்துவிட்டு துடைத்தபின்பு இக்கலவையை முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும்.

பலன்கள்:-

  1. முகப்பருக்கள் வராது.
  2. நாள்பட்ட கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
  3. நிறம் கூடும்.
  4. முடிவளர்ச்சிக் கட்டுப்படும்.
  5. முகம் பொலிவாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *