அதிகாரம் – 9 – குறள் – 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் றன்று. விளக்கம்:- சாவா மருந்து எனினும் – உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும், விருந்து புறத்ததாத் தான் உண்டல் – தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல், வேண்டற்பாற்று அன்று – விரும்புதல் முறைமையுடைத்து அன்று. கடந்த குறளிலே வாழ்க்கையினுடைய அவசியம் விருந்து தான் என்று கூறினார். இக்குறளிலே விருந்தினரை எப்படி பேண வேண்டும் என்று கூறுகிறார். விருந்தினரை நம்மில் ஒருவராக நினைக்க […]

Continue Reading

விருந்து ஓம்பல்

பாயிரம்:- அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென் புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடை நின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது. விருந்து எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று பரிமேலழகர் விளக்குகிறார். இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகள் உண்டு என்று நாம் முன்னதாகவேப் பார்த்தோம். அதில் வரும் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 80

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. விளக்கம்:- அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழி நின்ற உடம்பே உயிர் நின்ற உடம்பாவது, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன. இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் இல்லறத்தில் அன்பு மட்டுமே முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறுகிறது. ஆகவே அன்பு இல்லாமல் மனைவி குழந்தைகளிடம் அதைக் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. விளக்கம்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கையகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப்புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பெல்லாம் என்ன செய்யும் என்பதே பொருளாகும். என்ன என்பதற்கு எவன் என்பது பொருள். இது அக்காலத்தியப் பிரயோகம். நாம் கற்கின்ற அதிகாரம் இல்லறவியல். எனவே புறத்துறுப்பு என்பது உடலில் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் -78

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. விளக்கம்:- அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல், வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண் வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். பரிமேலழகர் எப்பொழுதும் குறளில் ஒரு சொல்லை மாற்றிப் போட்டு விளக்கம் தருவார். அப்படிச் சொல்லை மாற்றிப் போட்டு வாசித்தால் தான் நமக்கும் எளிதாக பொருள் புரிகிறது. எனவேதான் அகத்து அன்பு இல்லா […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்:- எலும்பு (முதுகெலும்பு) இல்லாத புழுவை வெயில் சுடுவது போல அன்பில்லாதவனை அறம் சுடும். முதுகெலும்பு இல்லாத புழுவால் வேகமாக ஓடமுடியாது. புழு மென்மையான உடலமைப்பைக் கொண்டது. ஆகவே வெயில் சுட்டு விடும் இதையே உவமையாகச் சொல்லுகிறார். என்பு இலதனை வெயில் போலக்காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும், அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள். என்பு (எலும்பு) […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. விளக்கம்:- அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார், மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. பகையை நீக்குவதற்கு அன்பு செய்வதே வழி. பகைக்குப் பகைச் செய்யச் செய்யப் பகை வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படிப் பகைத்துக் கொள்பவர்கள் இருவரும் நிம்மதியில்லாமல் மன அமைதியை இழந்து தவிப்பார்கள். தீமைக்குத் தீமைச் செய்தால் ஒருபோதும் நிம்மதி […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள்- 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்:- ஒரு நல்ல பயனை அடைய வேண்டுமானால் அதற்குக் கடின உழைப்பு தேவை. அதுபோலவே நல்ல பயனைப் பெற்றுக்கொள்ளக் கடின உழைப்பு இல்லாத விடயங்களும் உண்டு. இதைத்தான் இக்குறள் கூறுகிறது. இந்த உலகத்திலும் மனைவி, பிள்ளைகள், உறவுகள், நட்புகள் என்று இன்பமாக வாழ்ந்து அதன் பயனாக அடுத்தப் பிறவியிலும் சொர்க்கத்திற்குப் போகலாம். இதற்கு அன்பு முதன்மைத் தேவையாயிருக்கிறது. அன்பைப் பெருக்கிக் கொண்டால் போதும். அன்பு உற்று அமர்ந்து […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 74

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. விளக்கம்:- அன்பு ஆர்வம் என்ற கன்றை ஈனும். அந்தக் கன்றும் நட்பு என்ற கன்றைப் போடும். இதைப்போலவே அன்பு நமக்குள் இருந்தால் மற்றவர்களை மேல் ஆர்வம் பிறக்கும். அந்த ஆர்வத்தினால் நட்பு பிறக்கும். அன்பு ஆர்வமுடைமை ஈனும் – ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச்செய்த அன்பு, அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடையைத் தரும். ஒருவர் மீது நாம் அன்பு செலுத்த ஆரம்பித்தால் அவர் சார்ந்த மற்றவர்கள் மீதும் நமக்கு ஆர்வம் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 73

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. விளக்கம்:- உடம்போடு உயிர் ஏன் சேர்ந்தது? என்ற கேள்வி இக்குறளில் வருகிறது. உயிர் என்பது அறிவுப்பொருள். உடம்பு என்பது அறிவில் பொருள். மனித உடல் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். இந்தப் பஞ்ச பூதங்கள் இயக்கினால் மட்டுமே இயங்கும். அதுபோலவே உயிருக்கு அன்பு என்பது இயல்பு. ஆனால் அன்பின் இயல்பை உயிரால் செய்ய முடியாது. அன்பை வெளிப்படுத்துவதற்கு உடல் தேவை. எனவே இப்பிறவியின் நோக்கம் அன்பு செய்தலாகும். ஆர் […]

Continue Reading