அதிகாரம் – 10 – குறள் – 95

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. விளக்கம்:- ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் – ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார்கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல – இவையிரண்டும் அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. அணி (அணிகலன்) என்றால் அழகைக் கூட்டிகாட்டுவது. இக்குறளில் இன்சொல்லும் பணிவும்தான் அணி என்று வள்ளுவர் கூறுகிறார். ஒருவருடைய வார்த்தையில், செயலில், எண்ணத்தில்கூட பணிவு இருந்தால் எல்லோருக்கும் அவரைப்பிடித்துப் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. விளக்கம்:- யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு – எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு, துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும் – துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். முதல் இரண்டு குறள்களிலும் கூறப்பட்ட இன்முகமும் இன்சொல்லும் உடையவர்களாக நாம் இருந்தால் என்ன பயன் கிடைக்கும்? இதற்கு விடையளிக்கிறது இக்குறள். நாம் பார்க்கிறவரகள் எல்லோரிடமும் இன்முகம் காட்டி இன்சொல்லையேப் பேசுவோமானால், நமது வாழ்வில் துன்பத்தைத் தருவதாகிய வறுமை இல்லாமல் போகும் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 93

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். விளக்கம்:- முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி – கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் – பின் நண்ணிய வழி மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். கடந்த குறளில் கூறியதையே இக்குறளிலும் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். முதாலவது முகமலர்ச்சி இரண்டாவது இன்சொல் மூன்றாவது தான் கொடுத்தல். இவைகள் நமது மனதில் மிகவும் அழுத்தமாகப் பதியவேண்டும் என்பதற்காகவே […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம்:- அகன் அமர்ந்து ஈதலின் நன்று – நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று, முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் – கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். விருந்து என்ற அதிகாரத்தில் ஏற்கெனவே நாம் கற்றுக்கொண்டபடி விருந்து என்பது முதலில் இன்முகம் காட்டுவது; இன்சொல் பேசுவது; கொடுப்பது. இதில் எது முக்கியமானது என்று வள்ளுவர் எடுத்துக்கூறுகிறார். இக்குறளிலே […]

Continue Reading

இனியவை கூறல்

அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாது ஆகலின், விருந்தோம்புதலின் பின் வைக்கப்பட்டது. அதிகாரம் – 10 – குறள் – 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்:- இன்சொல் – இன்சொல்லாவன, ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் – அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். இன்சொலால் – இன்சொல் + ஆல். எனவே ஆல் என்பது […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. விளக்கம்:- அனிச்சம் மோப்பக்குழையும் – அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது. விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும். விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். நாம் மேலே பார்த்த ஒன்பது குறள்களிலும் விருந்து உபசரிப்பனுக்குச் சட்டங்களைக் கூறினார். வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கும் சட்டம் கூறினால் மட்டுமே இந்த விருந்து என்ற அதிகாரம் பூரணப்படும். இப்படிக் கேள்வி எழுகிறது. இங்கே அனிச்சம் என்ற மலரைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர். அனிச்சம் […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:- உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை – உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை, மடவார்கண் உண்டு – அஃது அறிந்தார்மாட்டு உளதாகாது; பேதையார்மாட்டே உளதாம். உடைமை – செல்வம். எனவே உடைமையுள் இன்மை என்பது செல்வமின்மை அல்லது வறுமை என்று பொருளாகும். ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தும் வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்காமல் விடுவது. இதுவே மடமை என்கிறார் வள்ளுவர். இப்படிப்பட்டவரிடம் எவ்வளவு […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விளக்கம்:- பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் – நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர், விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் – அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப்பயனை எய்தும் பொறியிலாதார். பொருள் வளம் இருக்கின்றபோது வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்லபடியாகப் பேணி உபசரிக்காதவர் ஒருநாளிலே எல்லாப் பொருளையும் இழந்துபோனோமே என்று நிச்சயம் புலம்ப நேரிடும். […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விளக்கம்:- வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை – விருந்தோம்பல் ஆகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று, விருந்தின் துணைத் தணை – அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. இக்குறளிலே திருவள்ளுவர் விருந்தை வேள்வி என்று கூறுகிறார். வேள்வி ஐந்து வகைப்படும். பிரம்ம யக்ஞம் தேவ யக்ஞம் பிதுர் யக்ஞம் பூத யக்ஞம் மானுட யக்ஞம் பிரம்ம யக்ஞம்:- பரம்பொருளைத் தேடி அதற்காகச் செய்யப்படுவது. […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 86

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. விளக்கம்:- செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் – தன் கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து – மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல்விருந்து ஆம். இல்லறத்தான் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணி உபசரித்து அனுப்பிவைத்த பின்பும் இன்னும் எந்த விருந்தினராவது வரமாட்டாரா? வந்தால் அவரோடு சேர்ந்து உணவருந்தலாமே என்று எதிர்பார்த்துக் […]

Continue Reading