அதிகாரம் – 14 – குறள் – 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும். […]

Continue Reading

அதிகாரம் -1 – குறள் – 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இந்தக் குறளிலும் சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் என்ற சொல் வருகிறது. இக்குறளும் மன வழிபாட்டையே வலியுறுத்துகிறது. இடும்பை என்றால் பிறவித்துன்பம் என்று பொருளாகும். பிறவித்துன்பங்கள்;- நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கின்ற துன்பம் – ஆதி ஆன்மீகம். பிற உயிர்களாலே அல்லது மற்றவர்களாலே நமக்கு வரும் துன்பம் – ஆதி பவுதீகம். தெய்வம் என்ற சொல் விதியையும் குறிக்கும். ஆகவே விதியினாலே வரும் துன்பம் – ஆதி […]

Continue Reading