அதிகாரம் – 14 – குறள் – 139

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். விளக்கம்:- வழுக்கியும் தீய வாயால் சொலல் – மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா – ஒழுக்கம் உடையவர்க்கு முடியா. ஒழுக்கமுடையவர்கள் (வழுக்கி) தவறியும் கூடத் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். பேசுவதற்கு இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்கள் எதற்கு? இதை இனியவை கூறல் அதிகாரத்தில் தெளிவாக நாம் படித்துள்ளோம். இதையே வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும். தீய சொற்களைப் பேசுபவர்கள் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். விளக்கம்:- நல்லவை நாடி இனிய சொலின் – பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுவமாயின், அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். பிறருக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று நாம் மனதால் நல்லச் சொற்களை இனிமையாகக் கூறவேண்டும். அல்லவை தேய அறம் பெருகும் என்பது குறள். அப்படியென்றால் அல்லவை என்பது மறம் ஆகும். […]

Continue Reading