அதிகாரம் – 8 – குறள்- 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்:- ஒரு நல்ல பயனை அடைய வேண்டுமானால் அதற்குக் கடின உழைப்பு தேவை. அதுபோலவே நல்ல பயனைப் பெற்றுக்கொள்ளக் கடின உழைப்பு இல்லாத விடயங்களும் உண்டு. இதைத்தான் இக்குறள் கூறுகிறது. இந்த உலகத்திலும் மனைவி, பிள்ளைகள், உறவுகள், நட்புகள் என்று இன்பமாக வாழ்ந்து அதன் பயனாக அடுத்தப் பிறவியிலும் சொர்க்கத்திற்குப் போகலாம். இதற்கு அன்பு முதன்மைத் தேவையாயிருக்கிறது. அன்பைப் பெருக்கிக் கொண்டால் போதும். அன்பு உற்று அமர்ந்து […]

Continue Reading

அதிகாரம் – 4 – குறள் – 39

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. விளக்கம்;- அறத்தால் (இல்லறத்தால்) வருவதே இன்பம் என்கிறார். அடுத்த அதிகாரம் இல்லறவியல் எனவே அதற்கு முகப்புக் கட்டுகிறார். அறத்தான் வருவதே இன்பம் – அறத்தோடு வருவதே இன்பம் என்று இருக்க வேண்டும். இங்கே ஒடு உருபுக்குப் பதிலாக ஆன் உருபு வருகிறது. ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக் கண் வந்தது. இப்படி வரலாமா? என்று கேட்டால் வரலாம் அதற்கு புறநானூற்றுச் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். தூங்கு […]

Continue Reading