அதிகாரம் -11 – குறள் – 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயர் நட்பு. விளக்கம்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவாதொழிக. நாம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்தவரை எக்காலத்திலும் மறக்கக்கூடாது. இதைக் கட்டளையாகவே கூறுகிறார் வள்ளுவர். இப்படிப் பெற்ற உதவியைப் போற்றவேண்டும். கடந்த இரு குறள்களிலும் பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவிக்குப் பெருமையுண்டு என்று கூறினார் அல்லவா? […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 77

என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்:- எலும்பு (முதுகெலும்பு) இல்லாத புழுவை வெயில் சுடுவது போல அன்பில்லாதவனை அறம் சுடும். முதுகெலும்பு இல்லாத புழுவால் வேகமாக ஓடமுடியாது. புழு மென்மையான உடலமைப்பைக் கொண்டது. ஆகவே வெயில் சுட்டு விடும் இதையே உவமையாகச் சொல்லுகிறார். என்பு இலதனை வெயில் போலக்காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற் போலக் காயும், அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள். என்பு (எலும்பு) […]

Continue Reading

அதிகாரம் – 3 – குறள் – 27

சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. விளக்கம்;- இக்குறளிலே தத்துவ உணர்வைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர். சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் இதிலிருந்து தோன்றியதே ஐம்பூதங்கள். ஆகாயபூதம் – ஓசை (சப்தம்) – காது காற்று – உணர்ச்சி (ஊறு) – மெய் நெருப்பு – பார்வை – கண் மண் – நாற்றம் (வாசம்) – மூக்கு நீர் – சுவை – வாய். இவற்றின் வகைகளாகிய கன்மேந்திரியங்கள் (5) ஞானேந்திரியங்கள் […]

Continue Reading