அதிகாரம் – 14 – குறள் – 137

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி. விளக்கம்:- ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் – எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப் பழி எய்துவர் – அதனினின்று இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அந்த ஒழுக்கத்தாலே உயர்வை அடைவார். அப்படியானால் ஒழுக்கந்தவறி நடந்தால் என்ன நிலை என்ற கேள்வி வருகிறது. ஒழுக்கந்தவறினால் உயர்வும் கிடைக்காது அதே நேரம் தாழ்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர். தேவை இல்லாத தவறை ஒருவர் செய்கிறாரென்றால் […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம்:- அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை. அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை) ஆக்கம் – செல்வம் பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது. […]

Continue Reading

அதிகாரம் – 14 – குறள் – 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். விளக்கம்:- ஓத்து மறப்பினும் கொளலாகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். கல்வியாளராகிய பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் தான் கற்ற வேதத்தினை மறந்தாலும் பின்பு அதனைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் தவறிப் போவாராயின் அவர் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவராகி விடுவார். […]

Continue Reading

ஒழுக்கம் உடைமை

அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஒதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல். இது மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின், அடக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது. மனிதன் ஏன் ஒழுக்கமுடையவனாக வாழ வேண்டும்? இல்லறத்தைச் சிறப்பிக்க ஒழுக்கம் முக்கியம். மனிதன் சென்று கொண்டிருக்கும் அன்புப்பாதை விருத்தியடைவதற்கும் ஒழுக்கம் அவசியம். அன்பு குறைந்தால் இல்லறத்தின் நோக்கம் சிதைந்துவிடும். ஒழுக்கம் முக்கியம். ஒழுக்கம் முக்கியமாக இருக்க வேண்டுமானால் அடக்கம் முக்கியம். ஆகவே, ஒழுக்கமுடைமைக்கு முன்னதாக அடக்கமுடைமையை வைத்தார். ஐம்புலன்களும் நம்மோடு வரவேண்டும். நாம் […]

Continue Reading

அதிகாரம் – 1 – குறள் – 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். விளக்கம் ;- ‘கற்றதனால் ஆயபயன் என்’ என்றால் கற்றதனால் ஆய பயன் என்ன? என்று அர்த்தம். திருக்குறள் இயற்றப்பட்டக் காலத்தில் ‘என்ன’ என்ற சொல்லுக்கு ‘எவன்’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அந்த ‘எவன்’ என்பதே ‘என்’ என்று ஆனது. இது ஆட்களைக் குறிக்காது. ‘கற்றதனால் ஆய பயன் என்’ என்று கேட்டதன் மூலம் கேள்வி கேட்கிற முறையில் பதில் சொல்லுகிறார் வள்ளுவர். கற்றதனால் ஆய பயன் […]

Continue Reading