அதிகாரம் – 6 – குறள் – 60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. விளக்கம்;- மங்கலம் – நன்மை ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை என்பது நற்குண நற்செய்கையோடு கூடிய மனைவி கிடைப்பதுதான். இப்படிப்பட்ட மனைவி கிடைத்த வாழ்க்கைக்கு நன்கலமாக அமைவது நல்ல புதல்வர்களைப் பெறுதலாகும். மங்கலம் என்பது மனைமாட்சி நன்கலம் என்பது நன்மக்கட்பேறு – இதனை யார் சொல்வார்கள்? அறிந்தோர் சொல்வார்கள் என்று பரிமேலழகர் உரைக்குறிப்பிலே கூறுகிறார். குறளிலே அறிந்தோர் என்பது சொல்லப்படாமல் நிற்கிறது. இதை நாம்தான் வருவித்துக்கொள்ள வேண்டும். […]
Continue Reading