அதிகாரம் – 11 – குறள் – 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. விளக்கம்:- நன்றி மறப்பது நன்று அன்று – ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று – அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன். ஒரே மனிதர் நன்றிக்கு உரிய ஒன்றையும் செய்வார். நன்று அல்லாதவற்றையும் செய்வார். எனவே ஒருவர் செய்த நன்றியை எப்போதும் நினைத்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி அல்லாததை உடனடியாக மறந்துவிட […]

Continue Reading

அதிகாரம் -11 – குறள் – 106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயர் நட்பு. விளக்கம்:- துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவாதொழிக. நாம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்தவரை எக்காலத்திலும் மறக்கக்கூடாது. இதைக் கட்டளையாகவே கூறுகிறார் வள்ளுவர். இப்படிப் பெற்ற உதவியைப் போற்றவேண்டும். கடந்த இரு குறள்களிலும் பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவிக்குப் பெருமையுண்டு என்று கூறினார் அல்லவா? […]

Continue Reading