அதிகாரம் – 14 – குறள் – 138

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். விளக்கம்:- நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும். நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும். […]

Continue Reading

அதிகாரம் – 11 – குறள் – 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. விளக்கம்:- நன்றி மறப்பது நன்று அன்று – ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று – அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன். ஒரே மனிதர் நன்றிக்கு உரிய ஒன்றையும் செய்வார். நன்று அல்லாதவற்றையும் செய்வார். எனவே ஒருவர் செய்த நன்றியை எப்போதும் நினைத்து நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். நன்றி அல்லாததை உடனடியாக மறந்துவிட […]

Continue Reading