அதிகாரம் – 13 – குறள் – 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 98

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். விளக்கம்:- சிறுமையுள் நீங்கிய இன்சொல் – பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல், மறுமையும் இம்மையும் இன்பம் தரும் – ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். கடந்த குறளில் பிறருக்கு நாம் கூறும் சொல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இக்குறளில் அந்தச் சொல்லின் பொருளும் கூட இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இம்மை, மறுமை என்று கூறுவதே மரபு. ஆனால் மறுமையை […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். விளக்கம்;- முதல் குறளிலே குழந்தைப் பேற்றினுடைய சிறப்பைச் சொன்னார். இரண்டாவது குறளிலே அந்தப் பிள்ளைகளைப் பெறுவதினாலே கிடைக்கக்கூடிய பயனில் ஒன்றைச் சொன்னார். இந்தக் குறளிலும் இதையே வலியுறுத்துகிறார். உலகியலிலே பொருள் அவசியம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று திருவள்ளுவரே கூறுகிறார். பொருளோ பணமோ நம்மிடம் நிலைக்க வேண்டுமானால் அதைப் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது நிலைக்கும். பிரபல எழுத்தாளர் ரோண்டா பைர்ன் எழுதிய நூல் மாயாஜாலம். […]

Continue Reading