அதிகாரம் – 1 குறள் – 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்;- தனக்குவமை இல்லாதான் என்றால் இறைவனை ஒரு விஷயத்திலும் உவமை சொல்ல முடியாது. அதாவது எதனோடும் இறைவனை ஒப்பிட முடியாது. தாள் – இறைவனின் திருவடி. சேர்தல் – இடைவிடாது நினைத்தல். அரிது – இல்லை என்பதை உறுதியாகக் கூறுவது. அதாவது, இறைவனின் திருவடிகளைத் தொழாதவரின் மனக்கவலை ஒருபோதும் நீங்காது. இறைவனை வழிபடாதவன் காமம், கோபம், மயக்கம் போன்ற பிறவித்துன்பங்களால் மீண்டும் மீண்டும் வருந்தி துன்பத்தை அனுபவிப்பான். […]
Continue Reading