அதிகாரம் – 1 குறள் – 7

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம்;- தனக்குவமை இல்லாதான் என்றால் இறைவனை ஒரு விஷயத்திலும் உவமை சொல்ல முடியாது. அதாவது எதனோடும் இறைவனை ஒப்பிட முடியாது. தாள் – இறைவனின் திருவடி. சேர்தல் – இடைவிடாது நினைத்தல். அரிது – இல்லை என்பதை உறுதியாகக் கூறுவது. அதாவது, இறைவனின் திருவடிகளைத் தொழாதவரின் மனக்கவலை ஒருபோதும் நீங்காது. இறைவனை வழிபடாதவன் காமம், கோபம், மயக்கம் போன்ற பிறவித்துன்பங்களால் மீண்டும் மீண்டும் வருந்தி துன்பத்தை அனுபவிப்பான். […]

Continue Reading

அதிகாரம் -1 – குறள் – 4

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இந்தக் குறளிலும் சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் என்ற சொல் வருகிறது. இக்குறளும் மன வழிபாட்டையே வலியுறுத்துகிறது. இடும்பை என்றால் பிறவித்துன்பம் என்று பொருளாகும். பிறவித்துன்பங்கள்;- நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கின்ற துன்பம் – ஆதி ஆன்மீகம். பிற உயிர்களாலே அல்லது மற்றவர்களாலே நமக்கு வரும் துன்பம் – ஆதி பவுதீகம். தெய்வம் என்ற சொல் விதியையும் குறிக்கும். ஆகவே விதியினாலே வரும் துன்பம் – ஆதி […]

Continue Reading