விருந்து ஓம்பல்

பாயிரம்:- அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென் புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடை நின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின் பின் வைக்கப்பட்டது. விருந்து எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று பரிமேலழகர் விளக்குகிறார். இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகள் உண்டு என்று நாம் முன்னதாகவேப் பார்த்தோம். அதில் வரும் […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை. விளக்கம்;- முதல் இரண்டு குறள்களிலே ஆறு கடமைகள் கூறினார். இக்குறளிலே ஐந்து கடமைகளை பற்றிக்கூறுகிறார். தென்புலத்தார் – பிதுர்த் தெய்வங்கள்;- தெற்கை இடமாகக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்கள் யாரென்றால் சில பிதுர்த் தெய்வங்கள். பிரம்ம தேவன் உலகத்தைப் படைக்கும் போது முதலில் கொஞ்சம் பேரை படைத்துவிட்டு என்னை நீங்கள் பூசிப்பீர்களாக என்று அவர்களை நியமித்தார். இப்படிப் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் ஏன் பிரம்மனை பூசிக்க வேண்டும்? நம்மை நாமே […]

Continue Reading